For Daily Alerts
Just In
ஆல்வார் மாட்டு வியாபாரி பெலுகான் படுகொலை வழக்கு- 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மாட்டு வியாபாரி பெலுகான் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2017-ல் பசு பாதுகாவலர்களால் பெலுகான் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பெலுகான் படுகொலை சம்பவம்.
இச்சம்பவம் தொடர்பாக 6 பசுபாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்ட பெலுகான், அவரது மகன்கள் இர்ஷாத், ஆரிஃப் ஆகியோர் மாடுகளை கடத்தியதாகவும் போலீசார் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 6 பசு பாதுகாவலர்களையும் விடுதலை செய்துள்ளது.
Comments
English summary
6 accused in the Pehlu Khan lynching case (2017) in Alwar have been acquitted by a Rajasthan court.
Story first published: Wednesday, August 14, 2019, 18:53 [IST]