பூரா பயலுக்கும் ராம்தேவ் மீது பொறாமை: சொல்கிறார் லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: யோகா குரு பாபா ராம்தேவ் மிகவும் வெற்றிகரமாக இருப்பதை பார்த்து அனைவருக்கும் பொறாமை என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் யோகா குரு யாதவ் பாபா ராம்தேவுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பது குறித்து முன்பு விமர்சித்து வந்தார். இந்நிலையில் திடீர் என்று ராம்தேவை பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாபா ராம்தேவ் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். அதனால் மக்களுக்கு அவர் மீது பொறாமை. அவர் கடின உழைப்பால் அனைத்தையும் சம்பாதித்துள்ளார் என்றார்.
அப்படி என்றால் ராம்தேவின் பதாஞ்சலி பொருட்களை பயன்படுத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு லாலு, நான் பதாஞ்சலி பொருட்களின் நிரந்தர பிராண்ட் அம்பாசிடர் என்றார்.
இந்நிலையில் ராம்தேவ் லாலுவை சந்தித்து சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ராம்தேவும், லாலுவும் ஒருவரையொருவர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது நண்பர்களாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.