மக்கள் ஆதரவு காங்கிரசுக்கு தான்.. ஆட்சியைப் பறி கொடுத்தாலும் அசராமல் பேசும் ராவத்
உத்தரகாண்ட் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியிருந்தார். ஆனால் மக்கள் கைவிட்டு விட்டனர்.
டேராடூன்: மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் கோவா அகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இவற்றின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. உத்தரகண்ட்டில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்,
இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெருவோம். நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை கடவுளிடம் பிராத்திக்கிறேன். உத்தரகாண்ட் மக்கள் எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் . தேர்தலில் வெற்றி பெறும் கட்சியும், எதிர்கட்சியாக இருக்கும் கட்சியும் மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் கடவுளும், மக்களும் அவரையும், அவரது கட்சியையும் கை விட்டு விட்டனர்.