காஷ்மீரிகள் "மிகப் பெரும் திருடர்கள்"... மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை
டெல்லி: ஜம்மு காஷ்மீரிகளை மிகப் பெரும் திருடர்கள் என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா விமர்சித்தது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, காஷ்மீரிகள் திருடர்கள் மட்டுமல்ல.. மிகப் பெரும் திருடர்கள்.. முறைகேடாக மின்சார இணைப்பை பெறுவது அங்கு அதிகம்..தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக மின் இணைப்பு பெறுகின்றனர் என்றார்.
இது ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பலைகளை எழுப்பியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இன்று இந்த பிரச்சனை எதிரொலித்தது. மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஏற்கெனவே நீதிபதி கங்குலி தொடர்பான சர்ச்சையில் பெண்களைப் பற்றி விமர்சித்து கருத்து தெரிவித்ததால் சர்ச்சையில் சிக்கியவர் பரூக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.