பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு.. விரைவில் அறிவிப்பு
மும்பை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க ரிசர்வ்வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 30ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தாமதத்திற்கு உரிய காரணம் கூறினால் மட்டுமே ஏற்கப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவற விட்டவர்கள் மீண்டும் ஒரு அவகாசம் கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் குறைந்த அளவுக்கான பண இருப்பு உள்ளதாக தெரிகிறது.
எனவே இப்படி குறைந்த அளவு பணம் வைத்துள்ளவர்களிடமிருந்து பழைய ரூபாய் ந ோட்டுக்களை பெற ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.