படுத்துறாங்களே.. ஐந்தாவது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் ஐந்தாவது நாளாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று திங்கள்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று ஐந்தாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் 4 முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று திங்கள்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு:
டெல்லி - ரூ.76.36
சென்னை - ரூ.79.25
கொல்கத்தா - ரூ.79.03
மும்பை - ரூ.83.75
இன்று திங்கள்கிழமை டீசல் விலை லிட்டருக்கு.
டெல்லி - ரூ.68.07
மும்பை - ரூ.72.23
கொல்கத்தா - ரூ.70.62
சென்னை - ரூ.71.85
பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் டெல்லியில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் மதிப்பு கூட்டு வரியான வாட் குறைவாக விதிக்கப்படுவதே.
கடந்த மாதம் அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்தது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா சீனா போன்ற நாடுகளின் பெட்ரோல் இறக்குமதியாளர்கள் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. .