பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாங்க வண்டி ஓட்டுறதா வேண்டாமா.. வாகன ஓட்டிகள் கேள்வி
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதனால் தற்போது கடந்த 20 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வை தொடர்ந்து லாரிகளின் வாடகையை 25 சதவீதம் உயர்த்த போவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.40-ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ74.63 ஆகவும் உள்ளது. அதுபோல் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.75 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.23-ஆகவும் உள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.70-ஆகவும் டீசல் விலை ரூ. 78.91 ஆகவும் உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ85.03 -ஆகவும், டீசல் விலை ரூ76.27-ஆகவும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் இப்படி விலை உயர்ந்து கொண்டே இருந்தால் நாங்கள் வாகனங்களை ஓட்டுவதா வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.