For Daily Alerts
Just In
பெட்ரோல் லிட்டருக்கு 0.42 பைசா, டீசல் ரூ.1.03 விலை உயர்வு - நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை 15 தினங்களுக்கு ஒரு முறையாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதன்படி தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.42 பைசாவும் , டீசல் லிட்டருக்கு ரூ.1.03 பைசாவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு 70ரூபாய் 02 பைசாவாக விற்பனை செய்யப்படும். டீசல் விலை 58 ரூபாய் 85 பைசாவாக விற்பனையாகும்.
பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 2ஆம் தேதி இறுதியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 29 பைசாவும், டீசல் 97 பைசாவும் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Comments
petrol price diesel price hike oil companies indian oil corporation பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள்
English summary
The prices of petrol and diesel have been increased by Rs. 0.42 and Rs. 1.03 per litre, excluding state levies, respectively with effect from midnight of January 15.
Story first published: Sunday, January 15, 2017, 23:43 [IST]