காஷ்மீரில் 144 தடை உத்தரவு.. அசாதாரண சூழலை விளக்கும் புகைப்படங்கள்
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள சூழலை விளக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவேளை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவோம் என்று கூறிவருகிறார்கள்.
Jammu and Kashmir: Latest visuals from various parts of Srinagar where section 144 CrPC has been imposed from midnight 5th August. pic.twitter.com/bFOeHnwh4O
— ANI (@ANI) August 5, 2019
இந்நிலையில் காஷ்மீரில் மிக அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
Jammu and Kashmir: Latest visuals from Doda; security forces have been deployed in the area. pic.twitter.com/K1ldQ73tCZ
— ANI (@ANI) August 5, 2019
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#WATCH: Latest visuals from Vikram Chowk in Jammu; security has been tightened in the city. #JammuandKashmir pic.twitter.com/qW7SJFsHm8
— ANI (@ANI) August 5, 2019
இதனிடையே ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்பட காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவுக்கு பிறகான காஷ்மீர் சூழல் குறித்து பல்வேறு புகைப்படங்கள் வந்துள்ளன. அவை உங்கள் பார்வைக்காக...
Jammu & Kashmir: Schools reopened normally today in Leh, classes resuming in colleges and other educational institutions too. pic.twitter.com/ETqKa1hEwo
— ANI (@ANI) August 5, 2019