தீபாவளி அன்று வைரலானது பொற்கோவிலின் போட்டோஷாப் புகைப்படம்
தீபாவளி நாளில் பொற்கோவிலின் போட்டோஷாப் புகைப்படம் ட்விட்டரில் வைரல் ஆனது.
அமிர்தசரஸ்: தீபாவளி அன்று வைரலான அமிர்தசரஸ் பொற்கோவிலின் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்கிற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் இந்தியா முழுக்க தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலும் அந்த நாளில் தான் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டதால் அவர்களும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், வானில் அலங்கார மெழுவர்த்திகள் பறக்க, மின் அலங்கார வெளிச்சத்தில் பொற்கோவில் பிரகாசமாக ஒளிரும் புகைப்படத்தை எழுத்தாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்தப் படத்தை பகிர்ந்தனர்.
How stunning is the Golden Temple looking. No crackers and instead lanterns up in the sky...🙏🙏 pic.twitter.com/IPZYe2AJwo
— SUHEL SETH (@suhelseth) October 20, 2017
தொடர்ந்து பலரால் பரப்பப்பட்ட நிலையில் அந்தப் புகைப்படம் வைரலானது. பலரும் அதை ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அது போலியானது என்று சிலர் சொன்னாலும் நம் மக்கள் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருந்தனர்.
It's a photo-shopped image... pic.twitter.com/5c3GlOQ39R
— Rajesh Kejriwal (@raj20k) October 21, 2017
தற்போது அது உண்மையான புகைப்படம் இல்லை என்றும், அது தன்னால் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைபடம் என்றும் அதை உருவாக்கிய வாலிபர் ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்.
#HappyDiwali2017 #goldentemple picart by me
— Navkaran Brar (@BrarNavkaran) October 20, 2017
If you are going to post this then please give proper credit🙏🏼#amritsar
(Copyright) pic.twitter.com/NkiCvUfVCh
அதோடு தான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்றும், ஒரு கலையின் வடிவமாகவே இதை உருவாக்கினேன் என்று நவ்கிரண் பிரர் என்கிற அந்த வாலிபர் ட்விட்டரில் பதிந்து இருக்கிறார்.