சபரிமலை தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துங்கள்.. தேவசம் போர்டுக்கு முதல்வர் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துங்கள் என்று தேவசம் போர்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என 4 பேர் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய போவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
எனினும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது என்ற முடிவில் தேவசம் போர்டு உள்ளது. இதனால் பெண்களை எப்போது அனுமதிதப்பது என்பது குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
[இந்தோனேஷியாவை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்.. சுனாமி.. பலி எண்ணிக்கை 1200ஆக உயர்வு!]
அப்போது பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என தேவசம் போர்டு கேட்டுக் கொண்டது. ஆனால் முதல்வரோ உடனடியாக தீர்ப்பை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.