பிரம்மபுத்திரா நதி மேல்… 9.15 கி.மீ தூரத்தில்.. நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் மோடி
பிரம்மபுத்திரா நதியின் மேல் 9.15 கி.மீ. தூரத்தில் நாட்டின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி திறந்து இன்று வைத்தார்.
டெல்லி: இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அஸ்ஸாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
நாட்டின் மிக நீளமான பாலமாக கருதப்படும் இது 9.15 கி.மீ நீளம் கொண்டது.
பயண தூரம் குறையும்
இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயண தூரம் வெகுவாக குறையும். அதாவது அஸ்ஸாம் - அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாக குறையும்.
எரிபொருள் மிச்சம்
இதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்திற்கும் மேம்படும்.
ராணுவத்திற்கு பயன்
950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
|
திறப்பு
2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தை இன்று திறந்து வைத்தார். வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பாலம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.