இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனது பலம்.. பிரதமர் மோடி பேச்சு
இளைஞர்கள் அளிக்கும் ஆக்கமும், புதிய சிந்தனைகளுக்கும் ஈடுஇணை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை: இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனக்கு பலத்தை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மும்பை சர்வேதேச குடியுரிமை விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற குளோபல் குடியுரிமை விழாவில் கலந்து கொண்டது அழகான தருணம்.
இளைஞர்கள் அளிக்கும் ஊக்கமும், புதிய சிந்தனைகளுக்கும் ஈடு இணை இல்லாதது. ஒரே தலைமுறையில் தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன். கறுப்பு பணம், தூய்மை இந்தியா திட்டத்தை இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்க நம்மால் முடியும். எதிர்கால இந்தியா நம் கையில் தான் உள்ளது. இந்தியா ஒரு இளம் நாடு அது எப்படி அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனக்கு பலத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.