லண்டன் பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது: மோடி கண்டனம்
லண்டன் பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது என பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: லண்டனில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார். பிரதமர் மோடி நாடு திரும்பிய நிலையில் லண்டனில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பொதுமக்களை இலக்கு வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Attacks in London are shocking & anguishing. We condemn them. My thoughts are with families of the deceased & prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) June 4, 2017
இத்தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார். அத்துடன் லண்டன் தாக்குதலானது அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.