கொல்கத்தா துறைமுக விழா: 105 வயது ஓய்வூதியதாரரின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி
கொல்கத்தா: கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் 105 வயது ஓய்வூதியதாரரிடன் காலை தொட்டு பிரதமர் வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
துறைமுக விழாவில் நேற்று பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளை மமதா பானர்ஜி புறக்கணித்தார்.
இன்றைய கொல்கத்தா துறைமுக விழாவில் 105 வயது ஓய்வூதியதாரரான நகினா பகத், 100 வயதான நரேஷ் சந்திரா சக்கரவர்த்தி ஆகியோரை பிரதமர் மோடி சிறப்பித்தார். அப்போது 105 வயது நகினா பகத், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்க முயன்றார்.
Prime Minister Narendra Modi ji felicitated the two oldest pensioners of the Kolkata Port Trust, Nagina Bhagat (105)and Naresh Chandra Chakraborty (100) during the150th-anniversary celebrations. While felicitating Nagina Bhagat, PM Modi touched his feet as the crowd cheered pic.twitter.com/1FJlMVffsz
— Shilpa Nair (@shilpamdas) January 12, 2020
ஆனால் அவரை தடுத்த பிரதமர் மோடி, நகினா பகத்தின் பாதங்களை தொட்டு வணங்கினார். பிரதமர் மோடி இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.