For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டை வடிவமைக்கிறார்கள்.. பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் உழைப்பை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

PM Modi greets on the occasion of National Press Day

பத்திரிகையாளர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டில், "தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, மீடியாவிலுள்ள அனைத்து நண்பர்களுக்குக்கும் எனது வாழ்த்துக்கள். நமது மீடியாக்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். அதிலும், குறிப்பாக, ரிப்போர்ட்டர்கள் மற்றும் கேமராமேன்கள் உழைப்பை. களத்தில் அவர்கள் சோர்வின்றி உழைத்து, பல்வேறு வகையான செய்திகளை கொண்டு வருகிறார்கள். தேசம் மற்றும் உலகை வடிவமைக்க அது உதவுகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி வெளியிட்டுள்ள டிவிட்டில், தேசிய பத்திரிகையாளர் தினத்தில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் நான்காவது தூண், நமது ஜனநாயக வேர்களை பலப்படுத்த பத்திரிகை சுதந்திரத்தை பயன்படுத்துவோம் என உறுதியேற்போம். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

English summary
"My greetings to all friends in the media on National Press Day. I appreciate the hardwork of our media, especially the reporters & camerapersons, who tirelessly work on the ground and bring forth various news that shapes national as well as global discourse" says PM Modi on the occasion of National Press Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X