கார்கில் போர் வெற்றி தினம்.. பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து!
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது.
இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
Recommended Video
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Kargil Vijay Diwas reminds us of India’s military prowess & the great sacrifices our armed forces make while steadfastly keeping India safe.
— Narendra Modi (@narendramodi) July 26, 2017
அதன்படி பிரதமர் மோடி கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும் என்று ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Remembering our brave soldiers who fought gallantly for the pride of our nation & the security of our citizens during the Kargil War.
— Narendra Modi (@narendramodi) July 26, 2017
மக்களின் பாதுகாப்பு,நாட்டுக்காக துணிச்சலுடன் போரிட்டவர்களை நினைவு கூறுங்கள் என்றும் மோடி கூறினார். இதைத்தொடர்ந்து டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நேற்றும் நாட்டின் பல இடங்களில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.