மகளுக்கு கல்யாணம்.. பத்திரிக்கை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. மோடியின் இன்ப அதிர்ச்சி.. நெகிழும் குடும்பம்
Recommended Video
வாரணாசி: மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த பாஜக தொண்டரும், ரிக்ஷாக்காரருமான மங்கல் கேவத் என்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
தனது சொந்த தொகுதியான, வாரணாசியில், சமீபத்தில் ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், நலத்திட்டப் பணிகளையும் அப்போது அவர் துவக்கி வைத்தார்.
மேலும், அங்கு மங்கல் கேவத் என்ற, ரிக்ஷா ஓட்டுநரையும் அவர் சந்திக்க நேரிட்டது. அவர் மோடியின் தீவிர ரசிகராம். மோடியை சந்தித்த கையோடு தனது மகள் திருமணத்திற்கு, பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார், மங்கல் கேவத்.
வேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா? ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா
தீவிர ரசிகர்
மோடியுடைய தீவிர ரசிகர் மட்டுமல்ல, மோடி அரசு கொண்டுவந்த சுவச் பாரத் திட்டத்தை தனது சொந்த செலவில் தனது கிராமத்தில் முனைப்போடு செயல்படுத்துபவரும் இதே மங்கல் கேவத். மோடி இவரை சந்தித்தபோது, மறக்காமல், சுவச் பாரத் சேவை குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கிராமத்தில் கங்கை நதிக்கரையை தனது செலவில், சுத்தமாக வைத்துக் கொண்டது குறித்து, மோடிக்கு அப்போது விளக்கியுள்ளார்.
இன்ப அதிர்ச்சி
இதுகுறித்து மங்கல் கேவத் கூறுகையில், "எனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், முதல் பத்திரிக்கையை, பிரதமர் நரேந்திர மோடிக்குதான் கொடுக்க வேண்டும் என விரும்பினேன். எனது கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. டெல்லிக்கே சென்று, பிரதமரிடம் நேரில் பத்திரிக்கை வழங்கினேன். ஆச்சரியம் என்னவென்றால், பிப்ரவரி 8ம் தேதி, பிரதமரிடமிருந்து, எனது மகள் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி, கடிதம் வந்தது. எங்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது", என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
திருமணம்
மங்கல் கேவத் மகளுக்கு பிப்ரவரி 12ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்கள் முன்பாக சரியாக வாழ்த்து மடல் அனுப்பி அக்குடும்பத்தை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. இதை அந்த குடும்பம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரதமரே தங்களை மதித்து வாழ்த்து மடல் அனுப்பியதை பெருமையுடன் நினைவு கூர்ந்து வருகிறார்கள் அவர்கள்.
|
நன்றி
மங்கல் கேவத் தனது மனைவி ரேணு தேவியுடன் மோடியை வாரணாசியில் சந்தித்து, மோடியிடம் தனது மகள் திருமணத்திற்கு வாழ்த்து மடல் அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக அடிமட்ட தொண்டர்களுடனும், கட்சி தலைமை மற்றும் பிரதமர் என்ற அந்தஸ்திலுள்ள மோடி போன்றோர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக பார்க்கப்படுகிறது.