For Daily Alerts
Just In
கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு
கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் 3 முறை முயற்சித்திருந்தார். ஆனால் நேரம் ஒதுக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அனைத்து கட்சி குழு நேரம் கேட்டிருந்தது. இந்த முறையும் பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை.
அத்துடன் தேவைப்பட்டால் மத்திய உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தியுங்கள் என கூறிவிட்டது பிரதமர் அலுவலகம். ஆனால் ராம்விலாஸ் பஸ்வானை சந்திக்க முடியாது எனக் கூறிவிட்டார் பினராயி விஜயன்.
Comments
English summary
The Prime Minister's Office has turned down the fourth consecutive request for appointment to Kerala CM Pinarayi Vijayan since November 2016.