என்னாது 600 கோடி பேர் ஓட்டு போட்டாங்களா? டாவோஸில் மோடியின் 'டங்க் சிலிப்'
பிரதமர் நரேந்திர மோடி தமக்கு 600 கோடி பேர் வாக்களித்ததாக டாவோஸில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
டெல்லி: இந்தியாவின் 600 கோடி பேர் தமக்கு வாக்களித்ததாக டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. 1997-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக இருந்த தேவே கவுடா அப்போது நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இம்மாநாட்டில் பங்கேற்றார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பு குறித்தும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் உரையாற்றினார்.
In 2014 after 30 years, the 600 crore Indians provided a complete majority to any political party to form govt at the centre. We took the resolution for the development of everyone and not just a specific group. Our motto is 'Sabka Saath Sabka Vikas': #PMModiAtDavos
— Republic (@republic) January 23, 2018
அப்போது, 2014 லோக்சபா தேர்தலில் 600 கோடி வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தனர் என தவறுதலாக பிரதமர் மோடி குறிப்பிட்டுவிட்டார். இது இப்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.