புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..
Recommended Video
டெல்லி: சீனா அதிபர் ஜின்பிங்கை தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அண்மையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி இந்தியில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார். தற்போது அதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி நடத்திய முறைசாரா பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஆதி தமிழர்களின் சிற்பங்களை பார்வையிட்டபடியே இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்தார். சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பின் போது தமிழில் வரவேற்றார். பின்னர் கோவளம் கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு தூய்மை படுத்தினார்.
இந்த பயண அனுபவத்தைத்தான் பிரதமர் மோடி அண்மையில் இந்தி மொழியில் கவிதையாக எழுதியிருந்தார். இன்று அக்கவிதையும் தமிழ் வடிவத்தை மோடி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் கவிதை இது: