பார்த்துட்டே இருங்கே.. இந்தியாவுக்கு அவர் பெயரை ஒரு நாள் வைக்கப் போகிறார்.. மோடி மீது பாய்ந்த மமதா
கொல்கத்தா: எல்லாவற்றுக்கும் தம்முடைய பெயரை சூட்டும் பிரதமர் மோடி ஒருநாள் இந்தியாவின் பெயரையும் கூட தம்முடைய பெயரும் வருமாறு மாற்றிவிடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மமதா பானர்ஜி பேசியதாவது: இது அன்னை தெரசாவின் பூமி. பெண்களை பெருமிதமாக கொண்டாடுகிற நிலம் இது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்து கொள்ள முடியாது.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறது பாஜக. அந்த கட்சி ஆளும் குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 1944 கொலைகள் நடக்கின்றன. பலாத்காரங்கள் அதிகமாக நடைபெறுகின்ற 2 மாநிலங்கள் பாஜக ஆளும் உபி, குஜராத். இது அரசின் ஆவணங்களில் உள்ள தகவல்கள்தான்.
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தேதியையும் நேரத்தையும் பிரதமர் மோடியே தீர்மானிக்கட்டும். நான் தயாராக இருக்கிறேன்.
பினராயி விஜயன் செயல்பாடுகளால் ஹேப்பி.. இடது முன்னணியே ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே
கொரோனா தடுப்பூசிகளில் மோடியின் படத்தை போட வைத்துள்ளனர். அது கொரோனா தடுப்பூசி அல்ல. மோடி தடுப்பூசி. கல்லூரிகள், ஸ்டேடியங்களுக்கு தன்னுடைய பெயரை சூட்டி வருகிறார் மோடி. விரைவில் இந்தியாவின் பெயரையும் கூட மோடியின் பெயர் வருமாறு மாற்றிவிடுவார்.
மேற்கு வங்கத்தில் இலவசமாக அரிசி விநியோகிக்கிறோம். ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ900. அத்துடன் நாள்தோறும் சிலிண்டர் விலை உயருகிறது. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இலவசமாக சிலிண்டரை மோடி தரவேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.