கிறிஸ்துமஸ்: ட்விட்டரில் வாழ்த்திய பிரதமர் மோடி... ராகுல்காந்தி
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளனர்.
டெல்லி: கிறிஸ்துமஸ் விழாவில் ஏசுவின் போதனைகளை நினைவில் கொள்வோம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்க வேண்டும் என்று ராகுல் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ஏசுவின் போதனைகளை நினைவில் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்திருக்க வேண்டும் என்று ராகுல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Wishing everyone a Merry Christmas. We remember the noble teachings of Lord Christ. pic.twitter.com/Bi9XQUUoPP
— Narendra Modi (@narendramodi) December 25, 2017
Merry Christmas to everyone. May this festive season be filled with joy, love and warmth.
— Office of RG (@OfficeOfRG) December 25, 2017