மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என்னென்ன?... பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறுகையில் பல்வேறு பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை, வான்வழி, கடல்வழி என அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளோம். விவசாயத்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்தியாவின் குறிக்கோள் ஆகும்.
மத்திய அரசின் தாரக மந்திரம் REFORM, PERFORM, TRANSFORM ஆகியன ஆகும். டெல்லியிலிருந்து வடகிழக்கு இந்தியா துண்டிக்கப்பட்டதை போன்ற தோற்றம் இருந்தது.
எங்கள் அரசு வட கிழக்கு இந்தியாவின் வாசலுக்கு டெல்லியை கொண்டு சென்றுள்ளது. உலக அளவில் முன்பு இந்தியாவுக்கு அடைக்கப்பட்ட கதவுகள் இப்போது திறந்து சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளன.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா மந்தமான நாடு என உலக நாடுகள் எண்ணியிருந்தன. நாட்டின் கடைகோடி கிராமத்திலும் மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. என்றார் மோடி.