சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நான் தவறு செய்திருந்தால் கூட என் வீட்டில் ரெய்டு நடக்கும்- மோடி
போபால்: சட்டத்தின் முன் அனைவரும் சமம், நான் தவறு செய்திருந்தால் கூட என் வீட்டில் ரெய்டு நடந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்டங்கள் நடைபெற்றுவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி பகுதியில் பாஜக பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் மோடி பேசுகையில் மாநில முதல்வர் கமல்நாத் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கும் காங்கிரஸ் கட்சியினர் என் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
திமுகவுக்கு ஆறுதலைத் தரும் எடப்பாடியின் தகுதி நீக்க ' கணக்கு' ஆயுதம்!
சோதனை
அவர்கள் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டதால் அங்கு சோதனைகள் நடந்தன. என் மீது தவறு இருந்தாலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.
பழிவாங்கும்
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ஒரு கட்சி அலுவலகத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு இயக்குநரகம் சமீபத்தில் ரூ. 20 கோடி பணத்தை கண்டுபிடித்தது. ஆனால் அதை எல்லாம் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
கட்சியிடம்
கர்ப்பிணிகளுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக நாங்கள் அனுப்பும் பணத்தை எல்லாம் இங்குள்ள மாநில அரசு சுரண்டி டெல்லி துக்ளக் சாலையில் உள்ள கட்சியிடம் கொடுத்து விட்டது.
என் மீது தவறு
இப்படி திருட்டுத்தனம் செய்பவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசுவது சிரிப்பாக உள்ளது. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். சட்டத்தின் மீது அனைவரும் சமம். என் மீது தவறு இருப்பதாக தெரிந்தால் கூட என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள் என்றார் மோடி. துக்ளக் சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.