ரோட்டோர கடையில் காப்பியை ருசித்த பிரதமர் மோடி
ஹிமாச்சல் பிரதேசத்தில் சாலையோர கடையில் சூடான டீயை பிரதமர் நரேந்திர மோடி சுவைத்தார்.
சிம்லா : ஹிமாச்சல் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி சாலையோர கடையில் காப்பியை சுவைத்தார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றுக் கொண்டது. இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான படங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாலையோர கடை ஒன்றில் அவர் காப்பி சுவைக்கும் படமும் போட்டுள்ளார்.
In Shimla, relished coffee at the Indian Coffee House and reminisced old days. The coffee tastes as good as it did two decades ago, when I would frequent Himachal for party work. pic.twitter.com/XOYzlpLc43
— Narendra Modi (@narendramodi) December 27, 2017
கடந்த 20ஆண்டுகளுக்கு முன்னர் ஹிமாச்சலம் வந்த போது காப்பி எப்படி இருந்ததோ அதே சுவையுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த காட்சிகளையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.