சுதந்திர தினம்... செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
Recommended Video
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியகொடியேற்றினார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார்.
இவரது உரையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பொதுத் தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் இவரது உரை மக்களிடையே எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது.
PM Narendra Modi unfurls the tricolour at Red Fort. #IndiaIndependenceDay pic.twitter.com/sTogztX64z
— ANI (@ANI) August 15, 2018
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக செங்கோட்டையில் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவெ கௌடா, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர்.
முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின்படி நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.