For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 பேர்.. 11,000 கொள்ளைகள்.. கோடிகளில் திருட்டு.. டெல்லி மெட்ரோவை கலக்கிய பெண் பவாரியாக்கள்

டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி மெட்ரோவில் திக்! திக்!...வீடியோ

    டெல்லி: டெல்லி மெட்ரோவில் திருடும் பெண் கொள்ளையர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
    இவர்களை கைது செய்ய டெல்லி போலீஸ் சினிமா போலவே திட்டமிட்டு இருக்கிறது.

    கடந்த ஒரு மாதமாக இதற்காக கடுமையாக உழைத்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் இப்போது 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்களிடம் இருந்து 25 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருடப்பட்ட பணம் ஆகும்.

    கொள்ளை எவ்வளவு

    கொள்ளை எவ்வளவு

    ஒவ்வொரு மாதமும் 1500க்கும் அதிகமான பிக் பாக்கெட்டுகள் இந்த பெண்கள் மூலம், டெல்லி மெட்ரோ ரயிலின் பெண்கள் கோச்சில் நடந்து இருக்கிறது. ஜனவரியில் மட்டும் அதிகமாக 1,617 கொள்ளைகள் நடந்து இருக்கிறது. இதை 20 பேர் கொண்ட லட்சுமி என்ற பெண் தலைமையிலான குழு செய்துள்ளது.

    எவ்வளவு புகார்கள்

    எவ்வளவு புகார்கள்

    இதில் பலர் புகார் அளித்து இருக்கிறார்கள். டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் திருட்டு என்று மட்டும் இதுவரை 11,873 புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் செய்தது இந்த ஒரு குழு மட்டுமே.

    வலைவீச்சு

    வலைவீச்சு

    இவர்களின் ஆட்டம் கடந்த ஜனவரியில் மிகவும் அதிகம் ஆகியுள்ளது. இதனால் டெல்லி போலீஸ் செயலில் இறங்கியது. எல்லா சிசிடிவி கேமரா வீடியோக்களையும் பார்த்தது. சந்தேகமாக ஆட்களை குறித்து வைத்து 8 பேருக்கு குறி வைத்தனர்.

    தீரன்

    தீரன்

    நேற்று அதேபோல் பெண் போலீஸ்கள் பயணிகள் போல் சென்று இருக்கிறார்கள். சிசிடிவி கேமராவை பார்த்து போலீஸ் சிலரை போன் மூலம் அவர்களுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. அவர்கள் இறங்கும் போது அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    கைது

    கைது

    இதில் 5 பேரும் திருடர்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. போலீஸ் இவர்களின் தலைவி லட்சுமிக்கு வலைவிரித்துள்ளனர். இன்னும் இந்த கூட்டத்தில் 15 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Police arrest 5 women robbers who ruled Delhi metro for years. They seized 25 lakhs from these people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X