பெண் பக்தர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சு.. போராட்டக்காரர்கள் கைது.. சபரிமலை அருகே பெரும் பதற்றம்
Recommended Video
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது.
இதன் காரணமாக சபரிமலை அருகேயுள்ள நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. குறைந்த வயது பெண்கள் வரும் வாகனங்களை பக்தர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட கார் கிரேன் கொண்டு அகற்றப்பட்டது.
திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் முன்னாள் தலைவர் டிரையார் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து வயது பெண்களையும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதித்தால், தற்கொலை செய்துகொள்வேன் என எச்சரித்திருந்த நிலையில் இவரை கைது செய்துள்ளது போலீஸ்.
Pamba: Police detain people protesting against the entry of women in the age group of 10-50 women to Kerala's #SabarimalaTemple pic.twitter.com/DLdoYMVz8J
— ANI (@ANI) October 17, 2018
பம்பையில் பெண்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும், போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்கும் பரபரப்பு சூழல் நிலவுகிறது. அதில் சிலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[சபரிமலை சென்ற தமிழ் குடும்பம் மீது தாக்குதல்.. வேடிக்கை பார்த்த போலீஸ்.. அதிர்ச்சி!]