அவன்கிட்ட பேசி சமாளிக்க முடியல.. விசாரணை அதிகாரிகளை திணற வைத்த இந்தியாவின் பின்லேடன்!
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: அப்துல் சுபான் குரேஷி என்ற தீவிரவாதியை டெல்லி போலீஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. இவர் இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர்.
உலகத்தில் உள்ள நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவன் நேரடி தொடர்பில் இருந்தார்.
தற்போது விசாரணை அதிகாரிகள் இவனை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவனிடம் பேசி எந்த விஷயத்தையும் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
அப்துல் சுபான் குரேஷி
அப்துல் சுபான் குரேஷி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் செயல்பட்டு வந்த முக்கியமான தீவிரவாதி. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மற்றும் சூரத்தில் 2008 ஜூலை மாதம் 26ம் தேதி தொடர்ச்சியாக இருபது இடங்களில் குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 56 பேர் மரணம் அடைந்தார்கள். பெங்களூரில் 2014ல், டெல்லியில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு என அனைத்திற்கும் இவர்தான் காரணம்.
பிடித்தனர்
2 நாள் முன்பு டெல்லி போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து இவரை கைது செய்து இருக்கிறது. தற்போது இவருக்கு 46 வயது நிரம்பி உள்ளது. சுபானுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
விசாரணை நடத்தினார்கள்
இவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அது குறித்து பேசி உள்ளனர். அதில் ''அவனிடம் பேச முடியவில்லை. அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி சினிமா வரை அனைத்தும் பேசுகிறான். ஆனால் முக்கிய தகவல் எல்லாவற்றையும் மறைக்கிறான்'' என்று கூறியுள்ளனர். அவன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்தவன்.
பிரச்சனை
மேலும் ''அவனுக்கு இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் பிடிக்கவில்லை. முக்கியமாக சிறுபான்மை பிரச்சனைகள் அனைத்தும் அவனுக்கு மனப்பாடமாக தெரிந்துள்ளது. எல்லாவற்றை குறித்தும் எங்களிடமே கேள்வி கேட்கிறான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.