நள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்
ஹரித்துவார்: உத்தரகாண்டில் நள்ளிரவு நேரத்தில் போதை கும்பலிடம் தனியாக சிக்கிய போலீஸ்காரரை போதை மாபியா கும்பல் அடித்து துவைத்து படுகாயப்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நள்ளிரவில் கள்ளச்சாரயம் கடத்தும் கும்பல போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார். ஸ்கூட்டியில் இருந்த கள்ளச்சாரயத்தை அவர்களிடம் இருந்து பறித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் ஒன்று சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
நடுரோட்டில் கள்ளாச்சாராயத்தை கடத்திய அந்த மாபியா கும்பலிடம் போலீஸ்காரர் இப்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#WATCH Uttarakhand: Policemen beaten up allegedly by liquor mafia in Haridwar y'day. SP City says,“Illicit liquor was being carried on scooty in Ranipur last night. On being questioned,accused misbehaved with police. Case registered. 5 accused arrested; search for 3 others on.” pic.twitter.com/cm8tsP7WB6
— ANI (@ANI) June 26, 2019
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் ஹரித்துவார் மாவட்ட போலீஸார் விரைந்து செயல்பட்டு கள்ளச்சாராய கும்பலை பிடித்தனர். இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் 3 பேரை தேடி வருவதாகவும் ஹரிதுவார் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.