டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்றப் போவது யார்… விறு விறு வாக்குப்பதிவு
டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறு விறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லிவாசிகள் விறு விறு வாக்குப்பதிவுகளை செய்து வருகின்றனர்.
டெல்லியில் 3 மாநகராட்சிகள் உள்ளன. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என்று 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளிலும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்திருந்தன.
இந்நிலையில் டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் தேதியை டெல்லி மாநில தேர்தல் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா அறிவித்தார். அதன்படி 3 மாநகராட்சிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்ற பின்னர், ஏப்ரல் 25-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கருத்துக் கணிப்புகள் பாஜகவே மீண்டும் மாநகராட்சிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எந்தக் கட்சி கைப்பற்றப் போகிறது என்று தெரிய வரும்.