தாய் என்றும் பாராமல்... 22 வயது காமுகன் கைது
ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது காமுகன் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
பலான்பூர்: குஜராத்தில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது மகன் கைது செய்யப்பட்டார்.
படான் நகரில் ஜல் சவுக் பகுதியை சேர்ந்தவர் ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆபாச படம் பார்த்த இவர், தாயின் அறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த தாயை பலாத்காரம் செய்தார்.
வழக்கமான சண்டை
இதனால் அவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரது வீட்டில் எப்போதும் மகனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்படுவது அக்கம் பக்கம் வீட்டாருக்கு தெரிந்த ஒன்று.
பலாத்காரம்
இதனால் இந்த கூக்குரலும் வழக்கமாக சண்டைக்கானது என நினைத்து யாரும் உதவ முன்வரவில்லை. இந்த சம்பவத்தால் அவரது தாய் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
போலீஸில் புகார்
இதையடுத்து பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த ரோஹனின் தந்தைக்கு தகவல் அளித்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள மூத்த மகனுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருந்தார்.
விசாரணையில் திடுக்
இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரோஹனை கைது செய்தனர். விசாரணையில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக அவரது தாயிடமே ரோஹன் அடிக்கடி கூறி வந்தது தெரியவந்தது.
பலாத்காரச் சம்பவம்
மேலும் அவரது தாய், சகோதரி முன்னிலையில் செக்ஸ் படம் பார்த்ததும் தெரியவந்தது. ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே மகன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.