ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து தந்தால் ரூ5,100 பரிசு... ஒட்டியாச்சு போஸ்டர்!
முசாஃபர்நகர்: ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் தேஜஸ்வி யாதவை கண்டுபிடித்தால் ரூ5,100 பரிசு வழங்கப்படும் என அக்கட்சித் தொண்டர்களே போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள் படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இன்றுவரை அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவை யாரும் பார்க்க முடியவில்லை.
அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் தலைமறைவு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
Bihar: Poster announcing a reward of Rs 5100 for the person who finds Tejashwi Yadav, seen in Muzaffarpur. pic.twitter.com/1gO6CUc5J6
— ANI (@ANI) June 21, 2019
இதனால் கொந்தளித்த ஆர்ஜேடி தலைவர்கள், தேஜஸ்வி யாதவ் குறித்து பேட்டி அளித்தனர். தேஜஸ்வி எங்கே இருக்கிறார்? என தெரியவில்லை. அவர் லன்டனில் உலகக் கோப்பை ஆட்டங்களை பார்த்து கொண்டிருக்கலாம் எனவும் பேட்டி அளித்தனர்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்.. ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
இந்நிலையில் வெறுப்படைந்த ஆர்ஜேடி தொண்டர்கள், தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ5,100 பரிசு வழங்குவோம் என முசாஃபர்நகரில் வீதி எங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.