செல்போன் ரேடியேஷனை தடுக்க மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்!...நோட் பண்ணுங்கப்பா !!
செல்போன் கதிர் வீச்சிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புதிய வகையிலான டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளார்.
டெல்லி: செல்போன் கதிர்வீச்சிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ரிசீவரை இணைத்து தனது செல்போனை பயன்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கூட்டத் தொடர் முடிவடைந்து வெளியே வந்த பிரகாஷ் ஜாவடேகரை பார்த்த பத்திரிகையாளர்கள், அங்கிருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் செல்போனுடன் ரிசீவரை இணைத்து யாருடனோ பேசி கொண்டிருந்தார்.
இதை பார்த்த செய்தி புகைப்பட கலைஞர்கள் அவரை போட்டோ எடுத்து கொண்டனர். இதுபோல் பயன்படுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Javadekar's fancy prop to prevent harmful cellphone radiation
— ANI Digital (@ani_digital) December 22, 2017
Read @ANI story | https://t.co/03MUk8od0w pic.twitter.com/9eo3KsVu7H
ஆனால் செல்போன் கதிர்வீச்சில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பிரகாஷ் ஜாவடேகர் இதுபோன்ற புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.