நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, மோடி, அமித்ஷாவிற்கு எதிரானவன்.... கர்ஜிக்கும் பிரகாஷ்ராஜ்!
தான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல, பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத் : நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஆனந்த் ஹெக்டேவிற்கு எதிரானவன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறும் அவர்கள் இந்துக்களே இல்லை என்றும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான். எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது.
30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா?
கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன்
நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். என்றாலும் எனக்கு பெங்களூரில் ஒரு இடம் தேவைப்பட்டது.
இந்து விரோதி என குற்றம்சாட்டுகிறார்கள்
ஆனால் அவர்களைப் பாருங்கள், அவர்களுக்கு என்னுடைய செயல் எவ்வளவு ஆற்றொண்ணாமையை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள். நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று என் மீது அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்துக்களுக்கு எதிரியல்ல மோடிக்கு எதிரி
நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல, நான் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஹெக்டேவிற்கு எதிரானவன் என்றார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் யார் இந்து என நீங்கள் எவ்வாறு கூற முடியும் என்று பிரகாஷ் ராஜை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.
ஆதரவு இல்லை
அதற்கு நான் இந்துக்கு எதிரானவன் என்று எப்படி அவர்கள் கூற முடியும். பிறரை கொலை செய்பவர்களுக்கு இந்துக்கள் உள்பட யாரும் ஆதரவு தருவதில்லை என்றும் பிரகாஷ் ராஜ் தெரவித்தார்.