மேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 211 தொகுதிகளில் வென்றது போல் மாபெரும் வெற்றி இந்த முறை கிடைக்காது. காரணம் பாஜக பெரிய டஃப் கொடுக்கிறது.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா என தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் மொத்தமுள்ள 294 சட்டசபைக்கு 148 பெரும்பான்மை பலம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் சி வோட்டர் நடத்தியது. அதில் 146 முதல் 162 இடங்களை பிடித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். பாஜக 99 முதல் 115 தொகுதிகளில் வெல்லும். வாக்கு சதவீதத்தில் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நிறைய அளவில் வித்தியாசம் இருக்காது.
இடதுசாரிகள்- காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பெருத்த அடி இருக்கிறது. இந்த முறை 29 முதல் 37 இடங்களில் மட்டுமே வெல்லும் என சர்வே கூறுகிறது.