நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.. குடியரசுத் தின வாழ்த்து
நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருக்கிறார்.
டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருக்கிறார். மக்களுக்கு அவர் குடியரசுத் தின வாழ்த்து தெரிவித்தார்.
69வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சியில் உரையாற்றினார். குடியரசுத் தலைவரான பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதில் அவர் மக்களுக்கு குடியரசுத் தின வாழ்த்து கூறினார். அதில் ராணுவ வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகள். நாட்டின் தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.
மேலும் ''நாட்டு விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கும் வாழ்த்துகள். எத்தனை தடைகள் வந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்றார்.
அதேபோல் ''பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக கல்வி, சமஉரிமை வழங்க வேண்டும். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதுதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்'' என்றார்.
மேலும் ''ரோபோடிக்ஸ், விவசாயம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் நாம் சீராக முன்னேற வேண்டும்.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.