முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்ட குடியரசு தலைவர்
டெல்லி: முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,
ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர் pic.twitter.com/DYbrtc4iL4
— President of India (@rashtrapatibhvn) March 14, 2018
"ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர். " என்று கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் டுவிட்டர் பதிவுகள் இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே இருந்தது. முதல் முறையாக மற்றொரு இந்திய மொழியில் அதுவும் தமிழில் டுவிட் செய்து அசத்தியுள்ளார்.