தன்பால் ஈர்ப்பால் திருமணம் செய்து கொண்ட சகோதரிகள்.. வாரணாசி கோயிலில் பரபரப்பு
வாரணாசி: சகோதரி உறவு முறை கொண்ட இரண்டு பெண்கள் திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட தன்பால் ஈர்ப்பு காரணமாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
உத்திரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள். இவர்கள் சகோதரி உறவு முறை கொண்டவர்கள் ஆவார். உறவுப்பெண்களான இருவருக்கும் இனம் புரியாத நட்பு இருந்து வந்துள்ளது. இந்த நட்பு திடீரென தன்பால் ஈர்ப்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினார்கள்.
இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி வாரணாசியில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு வந்து அங்குள்ள புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புரோகிதர் திருமணம் செய்துவைக்க முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் கோவிலுக்குள்ளே அமர்ந்த பெண்கள் திருமணம் செய்த்தேஆக வேண்டும் பிடிவாதம் பிடித்துள்ளனர்.
நாளை பணக்கார்களுக்கு ஷாக் கொடுப்பாரா நிர்மலா சீதாராமன்.. பரம்பரை சொத்துக்கு வரி?
இதை கேள்விபட்ட கோயில் முன்பு ஏராளமானோர் கூடினார்கள். இது புறம் எனில் மறுபுறம் பெண்கள் கோயிலுக்குள் திருமணம் செய்து கொண்டனர். இதனால் வெளியில் இருந்த மக்கள் கோயில் நிர்வாகததை முற்றுகையிட்டு சண்டை போட்டனர். எப்படி பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என கோயில் நிர்வாகத்தை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதனிடையே திருமணம் செய்து கொண்ட பெண்கள் தங்கள் திருமண புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். வாரணாசியில் நடந்த முதல் தன்பால் திருமணம் என்பதால் அங்குள்ள மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.