பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு 'குட்பை' சொன்ன மன்மோகன் சிங்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலக ஊழியர்களுக்கு குட்பை சொல்லியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது அலுவலக ஊழியர்கள் 110 பேரை சந்தித்து குட்பை சொல்லி, இத்தனை ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
2004ம் ஆண்டு முதன் முதலாக பிரதமர் பதவியை ஏற்ற மன்மோகன் சிங்கை 400 ஊழியர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சனிக்கிழமை பிரதமர் கடைசியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார். அதன் பிறகு அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். பிரணாபை சந்தித்து பேசிய பிறகு அவர் மக்களிடம் பேசவிருக்கிறார்.
மக்களிடம் பேசிய அதே நாளில் அவர் தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு டீ விருந்து அளிக்கிறார். இதையடுத்து அவர்களுக்கு பிரணாப் இரவு விருந்து கொடுக்கிறார்.