தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார்.. பிஆர் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு
தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார் என விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
டெல்லி: தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார் என விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு வாய்த்திறக்காமல் உள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் பிஆர்.பாண்டியன் தலைமையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கைதட்டி போராட்டம்
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க டெல்லியில் அவர்கள் கை தட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜந்தர் மந்தரில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 3 மணிவரை கெடு கொடுத்திருந்த அவர்கள் 3 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழிக்கப்பார்க்கிறார்
இதைதத்தொடர்ந்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய பிஆர் பாண்டியன், பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
பலமுறை முறையிட்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவிரி விவகாரத்தில் மோடி அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று புகார் தெரிவித்தார்.