For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி.. குஜராத்தில் கோலாகலம்

Google Oneindia Tamil News

காந்திநகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். குஜராத்தின் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார்.

இதன்பிறகு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு பேரணியிலும் மோடி பங்கேற்றார்.

Prime Minister Narendra Modi pays tribute to Sardar Vallabhbhai Patel statue

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், பிரிந்து கிடந்த மாகாணங்களை இணைத்து இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவருமான இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இன்று 145வது பிறந்த தினமாகும்.

இதையொட்டி, டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வெளியிட்ட ட்வீட்டில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முன்னோடிக்கு தாழ்மையான அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறினார்.

பின்னர், கெவாடியாவில் உள்ள 600 அடி உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்தார். மலர்களை தூவியும், பாலால் சிலையின் கால் பகுதியில் ஊற்றியும் அவர் மரியாதை செய்தார்.

பின்னர், தேசிய ஒருமைப்பாட்டு பேரணியிலும் மோடி பங்கேற்றார். கண்கவர் அணிவகுப்பில் மோடி தொப்பியுடன் காணப்பட்டார்.

English summary
Prime Minister Narendra Modi pays tribute to Sardar Vallabhbhai Patel on his birth anniversary, at the Statue of Unity in Kevadia, Gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X