For Daily Alerts
Just In
டெல்லி திகாா் சிறைக்குள் பயங்கரம்...கைதியை குத்திக் கொன்ற சக கைதிகள்
டெல்லி: திகாா் சிறைக்குள் கைதி ஒருவரை மற்ற கைதிகளே சரமாாியாக குத்திக் கொன்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
41 வயதான அஜய் என்ற கைதி பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் கைதி அஜய்க்கும், மற்ற கைதிகளான சுமித், ராகேஷ், ராமன் ஆகியோருக்கும் இடையே தகராறு எழுந்தது. தகராறு முற்றி கைகலப்பானது.
முடிவில் 3 கைதிகளும் அஜயை சரமாாியாக கத்தியால் குத்தியுள்ளனா். இதில் அஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசாா் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினா்.
சிறைக்குள் கைதிகளுக்கு கத்தி கிடைத்தது எப்படி என்பது மா்மமாக உள்ளது. இது குறித்து சிறைக் காவலா்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை தீவரமாகியுள்ளது.
English summary
prisoner was stabbed to death in Delhi Tihar Jail- 3 inmates arrest.