பிரித்விராஜ் சவான் சோனியா காந்தியின் தத்துப்பிள்ளை: கட்காரி தாக்கு
மும்பை: முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தத்துப் பிள்ளை என்று பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்படி அவர் கலந்து கொண்ட பேரணி ஒன்றில் பேசுகையில்,
முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் சோனியா காந்தியின் தத்துப் பிள்ளை. அவருக்கு மகாராஷ்டிராவை பற்றியே தெரியாது. அப்படி இருக்கையில் அவரால் எப்படி மாநிலத்தை முன்னேற்ற முடியும் என்றார்.
முன்னதாக புனேவில் நடந்த பேரணியில் கட்காரி மீது காலணியை வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.