தன்னிடம் இருந்து ராகுல் காந்தி காப்பியடித்தது மகிழ்ச்சியே - கண் அடித்தல் குறித்து பிரியா வாரியர்!
தன்னிடம் இருந்து கண் அடித்தலை ராகுல் காந்தி காப்பியடித்தது மகிழ்ச்சி என்று ஒரிஜினல் கண் அடிப்பு ராணி பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: தன்னை போல் ராகுல் காந்தியும் கண்ணடித்தது மகிழ்ச்சி என்று கேரள நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி உணர்ச்சி பொங்க பேசினார். அப்போது அவர் கூறுகையில் பிரதமருக்கு எதிராக என் மனதில் ஏராளமான வெறுப்புகள் இருக்கும் என நீங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால் உண்மை அது இல்லை. உண்மையை சொல்ல போனால் மோடிஜி, பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆகியோர் எனக்கு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருப்பதன் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்துள்ளனர். அதுபோல் இந்தியனாக இருப்பதன் அர்த்தத்தையும் இந்துவாக இருப்பதன் அர்த்தத்தையும், சிவபெருமானின் பக்தனாக இருப்பதன் அர்த்தத்தையும் சொல்லிக் கொடுத்துள்ளனர் என்றார்.
இதையடுத்து மோடியிடம் சென்று அவரை ராகுல் கட்டியணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆளுங்கட்சியினர் , எதிர்க்கட்சியினர் ராகுலின் செயலை வரவேற்றனர். இதற்கு ராகுல் காந்தி அசால்ட்டாக மோடியை பார்த்து கண்ணடித்தார்.
😂😂😂😂😂😂😂😂😂 pic.twitter.com/ygeToOK5zf
— Ankur Singh (@iAnkurSingh) July 20, 2018
இதை பிரியா வாரியருடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விவாதமே நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மலையாள படத்தில் கண் அடித்து ஒரே நாள் இரவில் பிரபலமாகிய பிரியா பிரகாஷ் வாரியர் கூறுகையில், நான் கல்லூரி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். அப்போது தான் ராகுல் காந்தியும் கண்ணடித்தது குறித்து அறிந்தேன்.
இது மிகவும் இனிதான சைகையாகும். கண்ணடிப்பதை நான்தான் தொடங்கினேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். ராகுல் காந்தியை ஒரிஜினல் கண்ணடிக்கும் ராணியே பாராட்டி விட்டார் அப்புறம் என்ன.