For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரியங்கா சோப்ரா வெற்றி பெற என்னோட ஆசிர்வாதமே காரணம்...: முலாயம் சிங் பெருமிதம்

Google Oneindia Tamil News

லக்னோ: தனது ஆசிர்வாதத்தால் மட்டுமே நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் எடவாவில் ஆண்டுதோறும் சாய்பி என்ற திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

Priyanka Chopra is a heroine today because of my blessing: Mulayam

இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது பிரியங்கா சோப்ராவும் அவரது தந்தையும் என்னை சந்தித்தனர். அப்போது நீ பெரிய நட்சத்திரமாக வருவாய் என நான் பிரியங்கா சோப்ராவை ஆசீர்வதித்தேன். அதனாலேயே அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.

ஒவ்வொரு சாய்பி திருவிழாவிலும் மாதுரி திட்ஷீத்,அமிதாபச்சன் உள்பட பலர் கலந்து கொண்டு உள்ளனர்.

நடிப்பு என்பது ஒரு கலை. ஒவ்வொருவரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

English summary
It is no hidden fact that Samajwadi Party chief Mulayam Yadav is a big fan of Bollywood. And this is the reason, every year influx of Bollywood celebrities are seen performing at the Saifai fest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X