விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க பிரதமருக்கு கடிதம் எழுதிய மகளிர் ஆணைய துணை தலைவி
சண்டிகர்: விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று, அரியானா மாநில மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதனிடையே, சுமன் தாகியாவின் கருத்துக்கும் தங்களுக்கும் உடன்பாடு இல்லை என்று அம்மாநில மகளிர் ஆணைய தலைவி கம்லேஷ் பன்சால் தெரிவித்துவிட்டார். மேலும், சுமன் நடவடிக்கை பற்றி புகார் தெரிவித்து அரியானா மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோருக்கும் கம்லேஷ் கடிதம் எழுதியுள்ளார். சுமன் தாகியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சுமன் தாகியா கூறுகையில், துணை தலைவி பதயும், தலைவி பதவிக்கு இணையானது. எனவே கம்லேஷ் என்னை கேள்வி கேட்க முடியாது. விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாதபோது அதை சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள் என்று நான் கூறியுள்ளேன். அதில் எந்த தவறும் இல்லை. எனது கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என்றார்.