காதலர் தின சர்ச்சை... கேரளாவில் சிவசேனாவுக்கு எதிராக 'முத்தம் தரும் போராட்டம்'
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் கொச்சியில் முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது.
கொச்சி: சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் கொச்சியில் முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலம் கொச்சியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மரைண்டிரைவ் பகுதி. இங்கு சர்வேச மகளிர் தினத்தில் ஏராளமான ஆண்களும் , பெண்களும் கூடி இருந்தனர்.
அப்போது அங்கு வந்து சிவசேனா தொண்டர்கள், அவர்களை இங்கே வரக்கூடாது என்று தகாத வார்த்தையில் திட்டி, பிரம்பால் அடித்து விரட்டினர். இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று முத்தப் போராட்டம் நடத்த " கிஸ் ஆப் லவ்" என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
முத்தம் தரும் போராட்டம்
இந்த அழைப்பை ஏற்று கொச்சியில் நேற்று முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு, முத்தம் கொடுத்து தங்கள் எதிர்பை தெரிவித்தனர்.
சட்டசபையில்...
இந்த போராட்டம் திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. சிவசேனாவின் தாக்குதல் சம்பவம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.
முதல்வர்
சிவசேனாவின் தாக்குதலுக்கு சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், சிவசேனாவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கிஸ் ஆப் லவ் அமைப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில்"கிஸ் ஆப் லவ்" அமைப்பினர் பொது இடங்களில் முத்தம் தரும் போராட்டம் நடத்தினர். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் இந்த அமைப்பு முத்தம் தரும் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்படத்தக்கது.