கல்யாண கர்நாடகா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது
கலபுர்கி: கல்யாண கர்நாடகா பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தினத்தை அம்மாநில அரசு இன்று கொண்டாடியது. பிரதமர் மோடியும் கர்நாடகா உருவான தினத்துக்கு கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில் ஹைதராபாத் கர்நாடகா அதாவது தற்போது கல்யாண கர்நாடகா பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தினர். ratyeka Kalyana Karnataka Horata Samithi என்ற அமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
Karnataka: Pratyeka Kalyana Karnataka Horata Samithi members detained by police, while they were protesting in Kalaburagi demanding a separate state of Kalyana Karnataka.
— ANI (@ANI) November 1, 2020
They allege that districts of Kalaburagi, Yadgir, Bidar, Koppal, Bellari & Raichur are under-developed. pic.twitter.com/3x2Qp6zIkC
கர்நாடகா அரசால் ஹைதராபாத் கர்நாடகா பகுதிகள் வஞ்சிக்கப்படுகிறது என்பது புகார். இதனால் தனிமாநிலம் கோருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.